states

24 மணிநேரத்தில் 6 பேர் உயிரிழப்பு: வீடுகளுக்கு தீவைப்பு

இம்பால், ஆக.6- மணிப்பூரில் 3 மாதங்களாக வன்முறை சம்பவங்கள் நீடிக்கும் நிலையில், ஞாயிறன்று  மேலும் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப பட்டுள்ளார். பாஜகவின் சூழ்ச்சியில், 3 மாதங்களாக மணிப்பூர் பற்றி எரிந்து வருகிறது. இந்த வன்முறையில் இதுவரை சுமார் 150-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லா யிரக்கணக்கானோர் சொந்த மாநிலத்தி லேயே அகதிகளாக்கப்பட்டுள்ள நிலையில், கலவரத்தை கட்டுப்படுத்தாமல் ஒன்றிய, மாநில பாஜக அரசுகள் வேடிக்கை பார்க் கின்றன.  இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்ட மணிப்பூரின் குவாக்டா பகுதியில் வெள்ளிக் கிழமையன்று இரவு நிகழ்ந்த வன்முறையின் பொழுது  மெய்டெய் இனத்தைச் சேர்ந்த 3 பேர்  சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திர மடைந்த மெய்டெய் இனத்தவர், குக்கி மக்க ளின் வீடுகளை தீயிட்டு எரித்தனர். இந்நிலை யில் ஞாயிறன்று மேற்கு இம்பால் மாவட்டத்தில் நிகழ்ந்த புதிய வன்முறை சம்பவங்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து 15 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளான கிழக்கு, மேற்கு இம்பால் பகுதிகளில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், பிரதமர் மோடி சொந்த உலகத்தில் மூழ்கி இருக்கிறார் என்று காங்கி ரஸ் குற்றம்சாட்டியுள்ளது. “நாட்டின் ஒரு பகுதி  எரிந்து கொண்டிருக்கிறது. மணிப்பூரில் கடந்த  24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த விவ காரங்கள் குறித்து அறியாதவர் போல தனது சொந்த உலகத்தில் மூழ்கி இருக்கிறார். அது  அவருக்கு ஒரு பொருட்டல்ல” என காங்கி ரஸ் விமர்சித்துள்ளது.